வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 788

திருக்குறள்- சிறப்புரை : 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. --- ௭௮௮
எதிர்பாராமல் இடை ஆடை அவிழ்ந்தபோது, தன்னை அறியாமலே கைகள் விரைந்துசென்று ஆடையைக் கைப்பற்றுவதுபோல, நண்பன் துன்புற்றபோது, தாமாகவே விரைந்து முன்சென்று இடுக்கண் களைவதே நட்பாகும்.
“சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணமாக.” –ஏலாதி.

நண்பர்கள் இறந்தவிடத்துத் தாமும் பிரிவாற்றாது இறத்தலும் ; வறுமையுற்றபோது பொருள் கொடுத்து  உதவி செய்தலும்; இன்சொல் கூறுதலும்; கூடியிருத்தலை விரும்புதலும்; வருந்தும்போது வருந்துதலும்; பிரியும் காலத்தில் உள்ளம் கலங்குதலும் ஆகிய ஆறு இயல்புகளும் உண்மையான நண்பர்களுக்கு இருப்பனவாகச் சான்றோர் கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக