புதன், 28 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :803

திருக்குறள் -சிறப்புரை :803
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. --- ௮0௩
(நட்பு எவன்)
நண்பர்கள் உரிமையோடு செய்தவற்றைத் தாமே செய்ததாகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பழகிய நட்பு என்ன பயனைத் தரும் ?
“ நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
  அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.”—நாலடியார்.

நல்லவர் என்று கருதி, நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர், நல்லவர் அல்லர் எனக் கண்ட போதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல்  அவரை, நண்பராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக