புதன், 21 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :800

திருக்குறள் -சிறப்புரை :800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. --- ௮00
குற்றமற்றவர்தம் நட்பினைத் தேடிக்கொள்ள வேண்டும்; போற்றும் பண்பில்லாதவரின் நட்பை, அவர் வேண்டும் ஒன்று எதுவாயினும் அதனைக் கொடுத்து, அவர் நட்பினை விட்டொழிக்க வேண்டும்.
“முயறலே வேண்டா முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக.” –பழமொழி.

முயற்சியின்றியே முனிவரேயானாலும் அவர் இத்தகையவர் என்பதை, அவர் கூடி இருக்கும் இனத்தாலே அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக