புதன், 31 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 780

திருக்குறள்- சிறப்புரை : 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.--- ௭௮0
உண்மையான போர்வீரனாகத் தன்னைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்த அரசன் கண்களில் நீர்மல்கப் போரில் வீரமரணம் பெற்றால், அத்தகைய சாக்காட்டினை உளமுருக வேண்டியேனும் பெற்றுக்கொள்ளத்தக்க பெருமை உடையது.
“ புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து…” –புறநானூறு.
புலவரால் பாடப்பெறும் புகழுடையோர், தாம் செய்யும் நல்ல செயல்களைச் செய்து முடித்தபின், வலவனால் இயக்கப்படாது இயங்கும் வானவூர்தியில் மேலுலகம் அடைவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக