ஞாயிறு, 28 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 777

திருக்குறள்- சிறப்புரை : 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்காப்புக் காரிகை நீர்த்து.--- ௭௭௭
தலைமுறை தோறும் நின்றுநிலவும் நிலைத்த புகழை விரும்பி உயிரை வேண்டாது விட்டுவிடவும் அஞ்சாத வீரர்கள்தம் கால்களில் வீரக்கழல் அணிந்து கொள்வது பெருமை உடையது.
“ புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.”—புறநானூறு.

புலி தங்கியிருந்து, பின் இடம் பெயர்ந்துசென்ற கற்குகை போல. அவனைப் பெற்ற வயிறோ இதுவே, அவனோ, போர்க்களத்திலே காணத்தக்கவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக