வெள்ளி, 12 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 762

திருக்குறள் – சிறப்புரை : 762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.--- ௭௬௨
படை, வலிமை குறைந்திருந்தபோதும் தம்  படைக்கு அழிவு நேரின்,  மன உறுதியுடன், அஞ்சாது எதிர்த்துப் போர்புரியும் ஆற்றல்., தொன்றுதொட்டுவரும் படை மறவர்க்கு அல்லாத பிறர்க்கு அரிதாம்.
“வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை..” ---தொல்காப்பியம்.

காட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமை உடையவன்.
உலகத் தமிழர்களுக்கு, இனிய இணைய நண்பர்களுக்கு, நட்பும் சுற்றமும் நாளும் பெருக;நலமும் வளமும் நாளும் சிறக்க ; இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உளம்நிறைந்த மகிழ்வுடன் படைக்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக