சனி, 13 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 763

திருக்குறள் – சிறப்புரை : 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். --- ௭௬௩
எலிப்படை கடல்போல் திரண்டு எதிர்நின்று ஒலித்தாலும் நாகம் அஞ்சி ஓடிவிடுமா? அந்த நாகம் சீறி மூச்சுவிட்டவுடனே எலிப்படை சிதறி ஓடிவிடும்.
“இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்ப….” –பதிற்றுப்பத்து.

போர்த் தொழிலை விரும்பிச் செய்கின்றவன் நீ,(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்) அதனால் பகைவர்களும் மனம் அடங்காமல், நின்னைப் புகழலாயினர், அழியாத கல்வியை உடையோய் வாழ்க நின் கொற்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக