வியாழன், 18 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 768

திருக்குறள் – சிறப்புரை : 768
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.--- ௭௬௮
போர் உடற்றும் சிறந்த வீரமும் பகைவரை எதிர்க்கும் வலிமையும் பெறவில்லையென்றாலும் தனது படைத் தொகுப்பின் தோற்றப் பொலிவாலே பெருமை பெறும்.
“ வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ.” –பதிற்றுப்பத்து.

பரந்த நிலப்பரப்பினை உடைய பகைவர் நாட்டை வஞ்சியாது எதிர் நின்று வென்று, புலவர்கள் புகழ்ந்து பாடுமாறு புகழை நிலை நிறுத்தினாய்,(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக