திங்கள், 8 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 758

திருக்குறள் – சிறப்புரை : 758
குன்றேறி யானைப்போர் கடற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.--- ௭௫௮
பொருளின் பொருளாவது, ஒருவன் தன் கையிருப்பைக் கொண்டு ஒரு செயலைச் செய்வது, குன்றின் மீது ஏறி நின்று யானைப் போரைக்கண்டு மகிழ்வதைப் போன்றதாகும்.
“ வருவாய் அறிந்து வழங்கல் இனிதே.” –இனியவை நாற்பது.
தமக்கு வருகின்ற வருவாய் அளவினை அறிந்து, பிறர்க்கு ஈதல் இனிதே.

பூதஞ்சேந்தனார் , வழங்கல் என்னும் சொல்லை மிகப்பொருத்தமாக ஆண்டுள்ளார்; அச்சொல்லுக்கு மாற்றாக ‘வாழ்தல்’ என்னும் சொல்லைக் கொண்டு, வருவாய் அறிந்து வாழ்தல் இனிதே என்றும் படித்து, வாழ்க்கையை வளமாக்குங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக