ஞாயிறு, 7 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 757

திருக்குறள் – சிறப்புரை : 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. --- ௭௫௭
அன்பு ஈன்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்ந்து வாழும்.
”அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்.” –நான்மணிக்கடிகை.

அருளினால் பிறக்கும் அறத்தொடு பொருந்திய இன்பம் எல்லாம் செல்வ வளத்தால் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக