வியாழன், 25 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 774

திருக்குறள்- சிறப்புரை : 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். --- ௭௭௪
போர்க்களத்தில் தன் கையிலிருந்த வேலை எதிர்த்த யானை மீது எறிந்து அதனக் கொன்று, கைவேலை   யானையொடு போக்கியவன், தன் மார்பில் தைத்திருந்த வேலைப் பறித்து இன்னொரு யானை மீது எறிந்து மகிழ்வான் .
“பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச்
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்.—திருமுருகாற்றுப்படை.
நிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று, சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற, சுடர்விடும் இலை வடிவாகிய நெடுவேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக