செவ்வாய், 23 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 772

திருக்குறள்- சிறப்புரை : 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.--- ௭௭௨
காட்டில் ஓடித்திரியும் முயலை வேட்டையாடக் குறிதப்பாது எய்திய அம்பை விட, யானையை வீழ்த்த எய்திய  குறி தப்பிய அம்பினை ஏந்துவது பெருமை உடையதாகும்.
“ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
 களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” –புறநானூறு.

ஒளிவீசும் வாள் படையை உடைய அரிய போரில். பகைவர்களைத் தோற்றோடச் செய்து, அவர்களுடைய யானையை வெட்டி வீழ்த்தி, வென்றுவரல் காளை போன்ற வீரனுக்குக் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக