செவ்வாய், 2 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 753

திருக்குறள் – சிறப்புரை : 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. – ௭௫௩
பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் போற்றப்படும் மெய்யாகிய அணையாவிளக்கு, தன்னைத் தேடியவர்க்கு அவர் நினைத்த தேயத்திற்கெல்லாம் பரவிப் பகை என்னும் இருளை நீக்கும்.
“இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே…..”--- அகநானூறு.
நெஞ்சே..! வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையராயினும் கைப்பொருள் இல்லார்க்கு, ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும் நன்கறிவேன்”-தலைவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக