செவ்வாய், 16 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 766

திருக்குறள் – சிறப்புரை : 766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.--- ௭௬௬
வீரம், மானம், செல்லும் வழியில் படை வீரர்களின் நன்னடத்தை,படைத்தலைவரின் திட்டமிடலில் தெளிவான அறிவு ஆகிய இந்நான்குமே  வெற்றிக்குரிய படைக்கு அரண்களாகும்.
“நல் அமர் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறந்கு நிலை நடுகல்.”—அகநானூறு.
பசுக்கூட்டங்களை மீட்கப் போரிட்டு வென்று, வீர மரணம் அடைந்த மானம் மிகுந்த மறவர்களுடைய பெயரினையும் சிறப்பினையும் பொறித்து,  வழிதோறும் மயில் தோகை சூட்டி நடப்பட்ட நடுகல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக