சனி, 20 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 769

திருக்குறள் – சிறப்புரை : 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. --- ௭௬௯
படை, இகழகத்தக்க குணங்கள்கொண்ட வீரர்களையும் படைத்தலைவரிடம் நீங்காத வெறுப்புணர்ச்சியும் படைக்குரிய தேவைகள் பற்றாக்குறையும் ஆகிய இவை இல்லாதிருக்குமாயின், படை வெற்றி பெறும்.
“உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேன் தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே…” –பதிற்றுப்பத்து.
உயர்ந்த உலகத்தில் உள்ளோர் நின்னைப் (குடக்கோ சேரலிரும்பொறை) புகழ அறநெறி தவறாமல் போரிலே மேம்பட்டுத் தோன்றி, நோயின்றி வாழ்வாயாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக