செவ்வாய், 9 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 759

திருக்குறள் – சிறப்புரை : 759
செய்கபொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல். --- ௭௫௯
முயன்று, முயன்று  மேலும் முயன்று பொருளை ஈட்ட வேண்டும். பொருளே பகைவரின் அகந்தையை அறுக்கும் கூரிய வாள்; அதனைவிட கூர்மையானது வேறு ஒன்றும் இல்லை.
“ இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காந்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.” –நற்றிணை.
புகழ் மிகும்பட வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணும்தோறும் பொலிந்து தோன்றுகின்ற ஆண் யானை.  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக