திங்கள், 15 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 765

திருக்குறள் – சிறப்புரை : 765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.--- ௭௬௫
இயமனே வெகுண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி என்ற குறிக்கோளுடன் ஒன்றாகக் கூடி அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
“ கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே” –பதிற்றுப்பத்து.

கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அவனையும் தோற்கச் செய்யும் ஆற்றல் மிக்கவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக