திங்கள், 29 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 778

திருக்குறள்- சிறப்புரை : 778
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.--- ௭௭௮
(உறினுயிர் – உறின் உயிர்.)
உயிருக்கு அஞ்சாது போரினை விரும்பி ஏற்கும் மறவர்கள்  தம் அரசன் சிலபோது சினந்துகொண்டாலும் அவர்கள் தம் வீரத்தில் ஒருபோதும் குறைதல் கொள்ளார்.
“ செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார்
க;ல் எறிந்து எழுதிய நல்அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு…” ---மலைபடுகடாம்.

கூத்தர்களே..! நீங்கள் போகும் நாட்டில் போரிட்டு இறந்தவன் இவன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஏற்பப் பெயர் எழுதிய கல், நல்ல அடிமரத்தையுடைய மரா மரங்களின் நிழலில் நடப்பட்டிருக்கும் அத்தகைய நடுகல்லாகிய கடவுள் நிறைந்த காடு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக