திங்கள், 1 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 752

திருக்குறள் – சிறப்புரை : 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.—௭௫௨
நல்லவரேயாயினும் பொருள்(செல்வம்) இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; தீயவரேயாயினும் பொருள் உடையவரை எல்லாரும் புகழ்வர். இஃது உலக இயல்பன்றோ..!
“ஒத்தகுடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை.” ---நாலடியார்.

அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும் ஒரு பொருளும் இல்லாதவர் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக