வெள்ளி, 5 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 756

திருக்குறள் – சிறப்புரை : 756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். --- ௭௫௬
அரசுடைமையால் வரும் பொருளும் சுங்கவரி வருவாயும் அரசனுக்கு அடிபணிந்தோர் செலுத்தும் திறைப் பொருளும் வேந்தனுக்கு உரிய பொருள்களாகும்.
“அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்” –புறநானூறு.

அறிவுடைய அரசன் தாம் கொள்ளும் பொருளை மக்களின் நிலை அறிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்துச் செழிப்படையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக