சனி, 27 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 776

திருக்குறள்- சிறப்புரை : 776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.---- ௭௭௬
தன் வாழ்நாளில் போர்புரிந்து வீரக்குறியாகிய விழுப்புண் படாது கழிந்த நாட்களை எல்லாம் வாழ்வில் பயன்படாத நாட்களாக எண்ணி வைப்பான்.
“ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
 ஆளன்று என்று வாளில் தப்பார்.” –புறநானூறு.

குழந்தை, இறந்து பிறந்தாலும் தசைப்பிண்டமாகப் பிறந்தாலும் ஆள் அன்று என்று கருதி விட்டுவிடாமல், அக்குழந்தையையும் வாளால் வடுப்படுத்தி அடக்கம் செய்யும் முறைமையில் தவறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக