ஞாயிறு, 14 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 764

திருக்குறள் – சிறப்புரை : 764
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.--- ௭௬௪
போர்க்களத்தில் அழிவின்றி,பகைவரின் சூழ்ச்சிக்கு இரையாகாது, தொன்றுதொட்டுவந்த வீரம்செறிந்த வலிமை உடையதே சிறந்த படையாகும்.
“உருஎழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப் பல செய்குவை வாழ்க நின் வளனே.” –பதிற்றுப்பத்து.

போர்க்களத்தில் நின்னால்(களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்) வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் பிணங்களைப் பேய்கள் உண்டு மகிழ்ந்து ஆட, குருதி செந்நீராய் ஓடப் பல போர்களைச் செய்வாயாக, நின் செல்வம் நிலைத்து வாழ்வதாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக