ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 751

திருக்குறள் – சிறப்புரை : 751
பொருளல் வரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் –௭௫௧
ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் ஒரு பொருளாக மதிக்கச் செய்யும் பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு ஒன்றும் இல்லை.
“ அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
 பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை.” –பழமொழி.

அருளுடைய நல்லார் முதல், அருள் அல்லாதார் வரை, பொருள் உடையோரைப் புகழ்ந்து போற்றாதார் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக