சனி, 16 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 738

திருக்குறள் – சிறப்புரை : 738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டுற்கிவ் வைந்து.—௭௩௮
நோயின்மை; செல்வம்; இயற்கைவளம்; மனநிறைவால் உண்டாகும் இன்பம்; பாதுகாப்பு ஆகிய இவ்வைந்தும்  நாட்டிற்கு அணி என்பர்.
“குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்
தான் செல் உலகத்து அறம்.” –நான்மணிக்கடிகை.
குளத்துக்கு அழகு தாமரை; பெண்மைக்கு அழகு நாணம்; ஒருவன் மறுமைக்கு ஆற்றும் அறங்கள் அவன் ஆண்மைக்கு அழகாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக