புதன், 20 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 740

திருக்குறள் – சிறப்புரை : 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. --- ௭௪0
மேற்சுட்டிய வளங்கள் அனைத்தும் ஒரு நாட்டில் நிறைந்திருந்தாலும் நாட்டுக்குத் தகுதிவாய்ந்த அரசன் அமையாதுபோனால் அவற்றால் பயன் ஒன்றும் இல்லை.
“பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்” ---புறநானூறு.
பால் இல்லாது குழந்தைகள் அழுகின்றனர்; மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு அமைந்த வீட்டில் உள்ளோர் நீர் இல்லாது வருந்திக் கூவுகின்றனர் ; இனியும் இங்கே தங்கியிருத்தல் கொடுமையன்றோ..?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக