சனி, 9 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 731

74. நாடு
திருக்குறள் – சிறப்புரை : 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. --- ௭௩௧
பருவம் தப்பாத விளைச்சலும் நன்னெறி நீங்காத தக்காரும் கேடு இல்லாச் செல்வரும் ஒருங்கு அமைவதே நாடாகும்.
“பூசல் அறியா நல் நாட்டு
 யாணர் அறாஅக் காமரு கவினே’” ---பதிற்றுப்பத்து.
போர் ஆரவாரத்தினை அறியாததும் புது வருவாயினை இடையறாது உடையதும் ஆகிய அழகிய நல்ல நாடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக