வியாழன், 7 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 729

திருக்குறள் – சிறப்புரை : 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.--- ௭௨௯
நல்ல நூல் பல கற்றறிருந்தும் சான்றோர் அவையின்கண் உரையாற்ற அஞ்சுபவரை ஒரு சிறிதும் கல்வியறிவு இல்லாதவரினும் கடையர் என்பர்.
”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்…” --நற்றிணை.
தொடங்கிய செயலைச்செய்து முடிக்காது இடையில் நிறுத்திவிடுவது இழிவைத் தருவதோடு அறியாமையையும் வெளிப்படுத்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக