செவ்வாய், 26 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 746

திருக்குறள் – சிறப்புரை : 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
 நல்லார் உடையது அரண்.—௭௪௬
பகைவரல் அரண் முற்றுகையிட நேரின் அரண் உள்ளே இருப்போர்க்குத் தேவையான எல்லாப் பொருள்களும் உடையதாய், நெருக்கடியான நேரத்தில் உதவக்கூடிய ஆற்றல் வாய்ந்த வீரர்களையும் கொண்டது அரணாம்.
“ அமர்கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
 பெரும் பல் யானைக் குட்டுவன்.” ----பதிற்றுப்பத்து.

போரை விரும்பிச் செய்வதில் தனக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்னும்படி பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அவரது அரிய மதிலை எதிர்நின்று வென்று கைக்கொள்ளும் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக