வெள்ளி, 8 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 730

திருக்குறள் – சிறப்புரை : 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். --- ௭௩0
சான்றோர் அவையில் தாம் கற்றவற்றை எடுத்துரைக்க அஞ்சுபவர் உயிருடன் இருப்பினும் இறந்தாரோடு வைத்து எண்ணத்தக்கவர்களே.
“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.”— குறள்.214.

உயிர் இரக்கம் அறிந்து உதவிபுரிந்து வாழ்பவனே உயிருடன் வாழ்பவன் ஆவான்; பிறர் துன்பம் கண்டு இரக்கம் காட்டாத மற்றையோர் உயிருடன் இருப்பினும் அவர்கள் செத்தாருள்  வைத்து எண்ணத்தக்கவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக