திங்கள், 4 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 726

திருக்குறள் – சிறப்புரை : 726
வாளொடுடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. --- ௭௨௬
பகைவர் படைகண்டு அஞ்சாத வீரர்களேயன்றிப் படைகண்டு நடுங்கும் கோழைகளுக்கு வாளோடு என்ன தொடர்பு? சான்றோர் நிறைந்த அவைகண்டு பேச அஞ்சுபவர்களுக்கு நூலோடு என்ன தொடர்பு ?
“ பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.” –இனியவைநாற்பது.

பற்பல நாளும் வீணே கழியாது பயனுள்ள நூல்களைக் கற்பதைப்போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக