செவ்வாய், 5 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 727

திருக்குறள் – சிறப்புரை : 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.--- ௭௨௭
சான்றோர் அவைக்களத்தில் பேச அஞ்சுகின்றவன் கற்ற நூல்; போர்க்களத்தில் பேடி ஒருத்தித் தன் கையில் ஏந்திய வாள் போல் பயனற்றதாகும்.
”அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை தனக்குப் பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு.” ---நான்மணிக்கடிகை.

சான்றோர் இல்லாத அவை பாழ்; கல்வியறிவு இல்லாத உடம்பு பாழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக