புதன், 6 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 728

திருக்குறள் – சிறப்புரை : 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.-- ௭௨௮
கற்றோர் கூடிய அவையில் தாம் கற்றவற்றைக் கேட்போர் மனங்கொள்ளுமாறு விரித்துரைக்கும் ஆற்றலற்றவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றிருந்தும் பயனற்றவர்களே.
“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.”—குறள்.650.

தாம் கற்றவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு விரித்துரைக்கும் ஆற்றல் அற்றவர். கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் கமழாத மலருக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக