புதன், 13 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 735

திருக்குறள் – சிறப்புரை : 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.--- ௭௩௫
தன்னலத்தால் வேறுபட்ட குழுக்களும் உடனிருந்தே அரசைப் பாழ்படுத்தும் உட்பகையும் வேந்தனை வருத்தித் துன்புறுத்தும் கொல்வினைக் குறும்பர்களும் இல்லாததே நாடாகும்.
“நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை…”—கலித்தொகை.
தம் நெஞ்சு அறிய. தாம்செய்த தீவினைகளைப் பிறர் அறியாதவாறு மறைக்கவும் செய்வர்; ஆயினும் அவர் தம்முடைய நெஞ்சத்துக்கு மறைத்தல் இயலாது; நெஞ்சத்தைக்காட்டிலும் அணுக்கமான சான்று வேறில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக