திங்கள், 25 டிசம்பர், 2017

புலவர் குழந்தை….

புலவர் குழந்தை….

”தமிழர் கொள்கையல்லாத வடவர் கொள்கையையே பரிமேலழகர் தம் இயல்புப்படி வலிந்து புகுத்தியுள்ளாரென்க. ‘ அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன்’ என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள், ‘ அறம் பொருளின்பம் வீடடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்றென்பது பழந்தமிழர் கொள்கையெனில், வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா? ‘ குன்றக் கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன? ஆசிரியர் முப்பால் கூறியிருக்க, நாற்பால் எனக் கூறுவது ஆசிரியர் கருத்தறியாமையோடு, ஆசிரியர் கருத்தைத் திரித்துக் கூறித் தமிழரை மயங்க வைத்தலுமாகும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக