வெள்ளி, 8 டிசம்பர், 2017

பேராசிரியர் பா. வளன் அரசு

பேராசிரியர் பா. வளன் அரசு…….
”ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் அருளப்பெற்ற திருக்குறளுக்கு முப்பால் என்பதே முதற்பெயராகும். அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப் பொருட்கள் மூன்றையும் முழுமையாக எடுத்து மொழியும் மாண்புடையது. 1812ஆம் ஆண்டு அச்சேறிய திருக்குறளில் முதலில் ஆய்வினை 1902ஆம் ஆண்டு மேற்கொண்டவர் திருமணம் செல்வக்கேசவராயர். பத்தாம் நூற்றாண்டில் மணக்குடவர் தந்த உரை விளக்கத்தைத் தொடர்ந்து பதின்மூன்றாம் நூற்றாண்டில் உரை வரைந்தவர் வண்துவரைப் பெருமாள் என்னும் பரிமேலழகர்; நாளிதுவரை திருக்குறளுக்கு நானூறு உரைகள் வெளிவந்துள்ளன.
 வீரமாமுனிவர் 1730ஆம் ஆண்டு இலத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் மட்டுமேஐம்பதுக்கு மேற்பட்ட அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர். நரிக்குறவர் பேசும் வக்கிரபோலியில் கிப்டு சிரோன்மணி மொழிபெயர்த்துள்ளார்.தைவான் மொழியில் 2010 ஆம் ஆண்டு மொழிபெயர்த்த அறிஞர் யூசி. 2014 ஆன் ஆண்டு சீனத்து மாண்டரீன் மொழியிலும் தந்துள்ளார். பேராசிரியர் சாகிர் உசேன் 2015ஆம் ஆண்டில் அரபு மொழியில் திருக்குறளை நல்கியுள்ளார். ” (காவ்யா)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக