வியாழன், 14 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 736

திருக்குறள் – சிறப்புரை : 736
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. --- ௭௩௬
பகைவரால் கேடு அடையாததாய் அரிதாகக் கேடு நேர்ந்தாலும் தன் வளம் ஒரு சிறிதும் குன்றாத நாடே நாடுகளுக்குள் சிறந்த நாடு என்பர்.

“ குழவியைப் பார்த்து உறூஉம் தாய்போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர…”—கலித்தொகை.

வேந்தே…! குழந்தையைப் பார்த்து பார்த்து அதற்கு முலை சுரந்து பால் ஊட்டும் தாயைப்போல மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து. உலகைப் பாதுகாத்து வருகிறது. இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது வருதற்கு நின் செம்மையான ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக