வெள்ளி, 15 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 737

திருக்குறள் – சிறப்புரை : 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.௭௩௭
வான்மழையும் ஊற்று நீரும் ஆகிய இருவகை நீர் வளமும் ; நலமும் வளமும் நல்கும் வாய்ப்பாக அமைந்த மலையும்;  அம்மலையினின்று வீழும் அருவி நீரும்; வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
“திருவில் அல்லது கொலை வில் அறியார்
 நாஞ்சில் அல்லது படையும் அறியார்.” –புறநானூறு.
சேர நாட்டு மக்கள் மழைவளம் தரும் வானவில்லைத்தவிரக் கொலைசெய்யும் போர் வில்லினை அறியார்; உழுபடைக் கருவியாகிய கலப்பையைத்தவிர வேறு கொலைப்படைக் கருவி ஒன்றனையும் அறியார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக