புதன், 24 ஜூன், 2020


தன்னேரிலாத தமிழ் -100

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின்
பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட ……………………….”கலித்தொகை.

முன்னொரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக் கைக்கொண்டதால் அப்பகுதி மூழ்கிற்று. மனம் தளராத பாண்டிய மன்னன், தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டுப் பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி, அவர் மேல் படையெடுத்தான். சோழர், சேரர் படைகளை வென்று, அவர்தம் புலி, வில் கொடிகளை நீக்கித் தன் மீன் கொடியைத் தான் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டித்  தன் ஆற்றலால் மேம்பட்டு நின்றனன், கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக