செவ்வாய், 16 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 93


தன்னேரிலாத தமிழ் - 93

வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட….” ---பதிற்றுப்பத்து.

வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாகப் புனைந்த பாண் மகளிர், நரம்புக் கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்களுக்குப் பணியாத இயல்பை உடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக