செவ்வாய், 23 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -99


தன்னேரிலாத தமிழ் -99

யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்ட த்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு ….”புறநானூறு.

யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ;  அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உயர்ந்த உலகில் இன்பம் அடைதல் கூடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக