புதன், 17 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -94


தன்னேரிலாத தமிழ் -94

இருபெரு வேந்தர் மாறுகொள் வயின்களத்து
ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்….”---அகநானூறு.

பேரரசர் இருவர் தம்முள் பகைகொண்டு போரிடும் போர்க்களத்தில், ஒப்பற்ற தன்படையைக் கொண்டு தன்முன் வருகின்ற படைகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் போர்க்கள வெற்றியாகிய செல்வமே பெருமை உடையது; அப்பெருமையே நிலைபெற்ற செல்வமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக