புதன், 10 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 87


தன்னேரிலாத தமிழ் - 87

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லோரும் சென்று அங்கு எதிர்கொள்வர்இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்.”நல்வழி.

செல்வம் நிறைந்தவன் கல்வியறிவு இல்லாதவனாயினும் அவனை எல்லோரும் கொண்டாடுவர். பொருளீட்டும் திறன் அற்றவனைத் தன்
மனைவியும் பெற்ற தாயும்கூட மதிக்க மாட்டார்கள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் உண்மையாயினும் அவை எவரிடமும் மதிப்பையும்  பெறுதல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக