செவ்வாய், 5 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-207.

 

தன்னேரிலாத தமிழ்-207.

சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்

நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்

அஞ்சுவரு பொழுதினும் என்கண்

துஞ்சா வாழி தோழி காவலர்

கணக்கு ஆய் வகையின் வருந்தி என்

நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.”  ----குறுந்தொகை, 261.

தோழி…! கார்ப்பருவத்தின் இறுதி நாட்களில், சேற்றில் நிற்றலை வெறுத்த, சிவந்த கண்களையுடைய எருமை, இருள் செறிந்த நள்ளிரவில்  ஐ என்ற ஒலியெழுப்பிச் சேற்றைவிட்டு வெளியே வரக் கரையும். அத்தகைய அச்சத்தைத்தரும் கூதிர்ப்பருவத்தும், என்னுடைய நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர் காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக்கொண்டு இருப்பது போல என் கண்கள் உறங்காதிருந்தன.-தலைவி, தோழிக்குக் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக