சனி, 30 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-227.

 

தன்னேரிலாத தமிழ்-227.

“ ……………………………………….முன்னாள்

கையுள்ளது போல் காட்டி வழிநாள்

பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்

நாணாய் ஆயினும் நாணக்கூறி என்

நுணங்கு செந்நா அணங்க ஏத்தி

பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்

ஆடுகொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச்

 செல்வல் அத்தை யானே ………..” ----புறநானூறு, 211.

முன்னை நாள் நீ, (குடக்கோச் சேரலிரும்பொறை) தரும் பரிசில் என் கையிலே வந்தடைந்தது என்ற உணர்வை உண்டாக்கிவிட்டுப் பின்பு பொய்யொடு பொருந்திப் பரிசில் வழங்காத தன்மைக்கு வருந்தி, நீ வெட்கப்படாவிட்டாலும் வெட்கப்படுமாறு கூறி, நான் செல்வேன். அவ்வாறு செல்லுங்கால், எனது நுண்ணிய புலமை மிக்க செவ்விய நாக்கு வருந்துமாறு புகழ்ந்து நாள்தோறும், பாடப்பாடப் பின்னரும் பாடப்  புகழை ஏற்றுக் கொண்ட,  உனது வெற்றிமிக்க அகன்ற மார்பை வணங்கி, வாழ்த்திப் போவேன் யான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக