சனி, 23 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-222.

 

தன்னேரிலாத தமிழ்-222.

கருங்கால் வேங்கை மலரின் நாளும்

பொன் அன்ன வீ  சுமந்து

மணி அன்ன நீர் கடற் படரும்

செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந

சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை

நீ வாழியர் நின் தந்தை

தாய் வாழியர் நிற் பயந்திசினோரே -----புறநானூறு, 137.

கரிய தாள் பொருந்திய வேங்கை மலரின் பொன்போன்ற பூவைச் சுமந்து , பளிங்கு மணி போன்ற நீர் நாள்தோறும் கடலில் சென்று கலக்கும் . அத்தகைய வளம் பொருந்திய சிறு வெள்ளிய  அருவியுடைய மலை நாடனே..! நீ  ( நாஞ்சில் வள்ளுவன்) வாழ்வாயாக ; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக