வெள்ளி, 8 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-210.

 

தன்னேரிலாத தமிழ்-210.

துனிநீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்

இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்

கண்ணுறு விழுமம் கைபோல் உதவி

நம் உறு துயரம் களையார் ஆயினும்

 இன்னாது அன்றே அவர் இல் ஊரே.” ---நற்றிணை, 216.

தலைவர் ஊடலைத்தீர்த்துக் கூடியின்புற என்னிடன் வாரார்  ஆயினும் முன்பு, பலமுறை அவர் மேனியை நோக்கி மகிழ்ந்துள்ளேன். அவ்வாறு அவருடைய அழகைக்கண்டு,  உயிருடன் வாழ்தல் இனியதாகும்.  இப்பொழுது அங்ஙனம் காண்கிலேனே ; கண்ணில் விழும் நுண்ணிய துகளையும் கை விலக்குவதைப்போல, நாம் கொண்ட துன்பத்தைத் தலைவர் நீக்காமல் போயினும் அவர் இல்லாத ஊர் துன்பத்தைத் தருகின்றது. இவ்வூரால் நேரும் பயன்தான் என்ன..? ஏதுமில்லையே..! –தலைவி, பாங்காயினார் கேட்பக் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக