ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-223.

 

தன்னேரிலாத தமிழ்-223.

நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே

தம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்

இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என

காண்தகு மொய்ம்ப காட்டினை…….”புறநானூறு, 43.

வேந்தே..! ( சோழன் மாவளத்தான்) உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீயோ, என்னைவிடப் பிழை செய்தவன் போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும் தலைமை, இக்குலத்தில் பிறந்தவர்க்கு எளிமையாகக் காணப்படும் பண்பாகும் ; இப்பண்பினை இன்று  யான் காணுமாறு வெளிப்படுத்தினை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக