ஞாயிறு, 10 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-212.

 

தன்னேரிலாத தமிழ்-212.

இல் உணாத் துறத்தலின் இல் மறைந்து உறையும்

 புல் உளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்

பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்

கூழும் சோறும் கடைஇ ஊழின்

உள் இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு

மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்

நொந்தனளாகி……” -----புறநானூறு, 160.

எனது இல்லம் உண்ணப் படுவனவற்றைக் கைவிடுதலால், அவ்வில்லத்தை இகழ்ந்து நினையாது உறைகின்ற மனையாள் ; புல்லிய உளை மயிர் போலும் குடுமியையையுடைய இளம் புதல்வன், பலபடியாகப் பால் இல்லாத வறிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்,  கூழையும் சோற்றையும் வேண்டி, உள்ளே ஒன்றிமில்லாத வறிய சோற்றடு கலத்தைத் திறந்து பார்த்து, அங்கே உணவைக் காணாது வருந்தி அழுகின்றான் ; அதனைப் பார்த்து அவன் அழுகையை நிறுத்த இயலாது, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும் நிலவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது மிகவும் வருந்தினாள் என் மனைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக