திங்கள், 25 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-224.

 

தன்னேரிலாத தமிழ்-224.

பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட

மின்னொளிர் வானம் கடல் உள்ளும் கான்று உகுக்கும்

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து.” ----நாலடியார், 269.

பொன்னிறம் உடைய நல்ல நெல்மணிகள் பொதிந்திருக்கும் பயிர்களின் கருவானது வாடிக்கொண்டிருக்க, மின்னி ஒளிர்கின்ற வானம் விளைவயலில் பெய்யாமல் கடலில் பொழிந்து செல்வதைப்  போன்றதே ,அறிவில்லாதவர்கள் பெற்ற பெருஞ்செல்வமும் அவர்தம் கொடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக