வியாழன், 28 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-225.

 

தன்னேரிலாத தமிழ்-225.

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்

தான் செல் உலகத்து அறம்.-நான்மணிக்கடிகை, 9.

 நெல்லும் கரும்பும் நீர்வளமிக்க நன்செய் நிலத்துக்கு அழகாகும் ; வளமான நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரை அழகாகும் ; நற்பெண்ணின் அழகுக்கு நாணம்  அழகாகும் ; ஒருவன் செய்யும் அறம் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழகாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக